5.9.23

வெற்றிவேல் முருகன் ஜி

 உங்க கொள்கை என்ன ஜி?

கொள்கையா? அப்டின்னா?
அனைத்து பொதுமக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கும் என்னென்ன செயல்திட்டம் வெச்சிருக்கீங்க?
வட இந்திய மக்களுக்கு ராமன் ஜி
கேரள மக்களுக்கு ஐயப்பன் ஜி
தமிழக மக்களுக்கு முருகன் ஜி
மராட்டி மக்களுக்கு கணேஷ் ஜி
அவ்ளோதான் ஜி. இதுபோதாதாங்கிறன். இன்னும் இவங்களுக்கு என்ன வேணும்? எதுக்குங்கிறன்? இவாயெல்லாம் பொறக்குறதே நமக்கு சேவை செய்யத்தானே..! எதுக்கு கொள்கை மண்ணாங்கட்டி?

30.07.2020

சிறப்பு உயிரிகள்...

 


"இதில் நகைச்சுவை என்னவென்றால்..., சுய தேடல் இல்லாத; சுயமாய் எதையும் தேடிப் படிக்கவும் சிந்திக்கவும் திறனில்லாத; தன்னைச்சுற்றி வாழ்வோருக்கோ அல்லது பிறருக்கோ 10 காசுக்கும் பயனில்லாமல் பூமிக்கு பாரமாய் வாழும் சிறப்பு உயிரிகளும் பெரியார் எதிர்ப்பு பதிவுகளை பதிவதும் பகிர்வதும்தான்"

30.07.2020

தி.மு.க -விற்கு நன்றி...

ஹிந்துக்களின் பாதுகாவலர்கள் நாங்கள்தான் என்று சொல்லிக்கொண்டு கந்த சஷ்டிக்கு மட்டும் நீலி அக்கறைகாட்டி நடித்து இடப்பங்கீடு விவகாரத்தில் பல லட்சம் ஹிந்து இளைஞர்களின் எதிர்காலத்திற்கு வேட்டு வைத்தது பார்ப்பனிய ஜனதா கட்சி. அவாள்களின் சூழ்ச்சி புரியாமல் பல இணைய அறிவாளிகளும் திமுக-வை சாடிக்கொண்டிருந்தார்கள். இன்றைக்கு அந்த திமுக-தான் பல லட்சம் பிற்படுத்தப்பட்ட ஹிந்து இளைஞர்களின் எதிர்காலத்தை போராடி பாதுகாத்துள்ளது.

அரைகுறையாக சமூகநீதி வரலாறு தெரிந்துகொண்டு திமுக-வை விமர்சிப்பதே அரசியல் மேதைத்தனம் என்று உளறும் சகோதரர்கள் & சங்கிகள் இந்திய பார்ப்பன அரசியலை சற்றாவது கூர்ந்து கவனித்து விமர்சித்தால் நம் அனைவருக்கும் நல்லது.

28.07.2020


கடவுள் பிறந்த கதை

மனிதன் கடவுளைப் படைக்கும் போது அவனுக்கு கடவுள் பற்றி நிறைய சந்தேகங்கள் எழுந்தன. கடவுள்தான் இந்தப் பெரிய தட்டையான உலகத்தை படைத்தாரா? அவர் ஒருவரே இத்தனையும் படைத்திருப்பாரா? என்றெல்லாம் சிந்தித்தான்.

கடவுள் அவ்வளவு பெரிய அப்பாடக்கராக எல்லாம் இருக்க முடியாது, எப்படியும் உதவிக்கு நிறைய கடவுள்கள் இருக்கும் என்கின்ற முடிவுக்கு வந்தான்.
பிறப்புக்கு, இறப்புக்கு, நெருப்புக்கு, காற்றுக்கு, நீருக்கு என்று கடவுள்களை உருவாக்கிக் கொண்டே வந்தவனுக்கு குழப்பம் தீரவில்லை. இவ்வளவு பெரிய நீரை, சுழன்று அடிக்கும் காற்றை படைக்கின்ற அளவிற்கு இந்தக் கடவுள்களுக்கு சக்தி இருக்க முடியுமா என்று சிந்தித்தான். இரண்டு கைகளையும், ஒரு தலையையும் வைத்துக் கொண்டு கடவுள்களால் இவற்றை செய்து விட முடியுமா?
மனிதனிடம் அதற்கும் ஒரு பதில் இருந்தது. 'கடவுளே! உன்னிடம் உள்ள இரண்டு கைகளையும் ஒரு தலையையும் வைத்துக் கொண்டு இவற்றை எல்லாம் உன்னால் செய்ய முடியாது, நான் உனக்கு நான்கு தலைகள், ஆறு தலைகள் உருவாக்கித் தருகிறேன், பத்துக் கைகள், நூறு கைகள் தருகிறேன. அவற்றை வைத்து எல்லாவற்றையும் பார்த்துக் கொள்' என்று ஒரே போடாக போட்டான்.
கடவுளுக்கு பசிக்கும் என்று சாப்பாடு கொடுத்தான். கலியாணம் கட்டி வைத்தான்.வீடு கட்டிக் கொடுத்தான். ஊரை சுற்றிக் காட்டினான். எல்லாம் செய்தும் கடவுள் பற்றிய மனிதனின் சந்தேகங்கள் தீரவே இல்லை.
கடவுளுக்கு பூசை செய்கின்ற போதும், தனக்குத்தான் பூசை நடக்கிறது என்பது கடவுளுக்கு புரியாமல் போய் விடுமோ என்கின்ற அச்சம் மனிதனுக்கு உண்டு. அதனால் கடவுளுக்கு தான் வைத்த அத்தனை பெயரையும் சொல்லிக் கூப்பிடுவான். அதை செய்தவனே, இதை செய்தவனே என்றெல்லாம் வர்ணிப்பான். கடவுளின் வலிமை மீது அவ்வளவு சந்தேகம் மனிதனுக்கு.
மனிதனுக்கு நோய் வந்தால், அவன் கடவுளை வேண்டுகின்ற முறையே அட்டகாசமானது. உடல்நலத்தை காப்பாற்று என்று சொன்னால், கடவுளுக்கு விளங்குமா என்றும் அவனுக்கு சந்தேகம். தன்னுடைய உடலில் உள்ள அத்தனை பாகங்களையும் சொல்லி, அவற்றை எல்லாம் காக்க வேண்டும் என்று கடவுளை வேண்டினால்தான் அவனுக்கு நிம்மதியாக இருக்கும். எல்லாம் வல்ல கடவுளால் தன்னுடைய உடலில் எங்கே பிரச்சனை என்பதை கண்டுபிடிக்க முடியாது என்று அவன் உறுதியாக நம்புகிறான்.
மனிதன் இத்தனை சந்தேகங்களுடன் கடவுள்களை படைத்ததை விட, அவற்றை படைக்காமலேயே விட்டிருக்கலாம்.

- வி. சபேசன்

19.07.2020

சனாதனம் காக்கலாமா?

ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் குழந்தைத் திருமணங்கள் அதிகம் நடந்துகொண்டிருந்தது. உறவின்போது பல சிறுமிகள் இறந்துபோயினர். இதனை தடுக்க 12 வயதுக்குட்பட்ட பெண்களுடன் உறவுகொண்டால் தண்டனை என்று சட்டம் கொண்டு வந்தது ஆங்கில அரசு.

இது எங்கள் மத நம்பிக்கை, எங்கள் மனம் புண்படுகிறது என்று இந்த சட்டத்தைக் கடுமையாக எதிர்த்தார்கள் அப்போதைய மத மூடர் கும்பல்கள்.
மூடர்கள் மனம் புண்படுகிறது என்று ஆங்கிலேயர்கள் அச்சட்டத்தை தவிர்த்திருந்தால் படிப்படியாக இன்றைக்கான மாற்றம் வந்திருக்குமா?

19.07.2020

வெற்றிவேல் வீரவேல்...!

"எல்லாத்துக்கும் திமுக-தான் காரணம். பல்லாயிரம் வருஷத்துக்கு முன்னாடி இந்து மத கடவுள்களை பத்தி கேவலமா ஆபாசமா கதை எழுதி அத புராணங்கள்னு நம்பவெச்சி இந்து மதத்தைக் கெடுத்து வெச்சதே இந்தத் திமுக-தான். 4 வர்ணத்தை பிரிக்கச் சொல்லி பொறப்புலயே ஜாதி ஏற்றத்தாழ்வு கற்பிச்சதும் இந்தத் திமுக-தான். இந்து மதத்தில் இருக்கிற அநியாயங்கள் எல்லாத்துக்கும் காரணமும் இந்த திமுக-தான். வேற யாரும் காரணம் இல்ல. இப்போ இந்துக்களாகிய நீங்கள் என்ன பண்ணனும்னா நான் சொல்றத அப்படியே நம்பனும். உண்மை என்ன ஏதுன்னு எங்கேயும் ஆதாரம் தேடி படிச்சி யோசிக்கக்கூடாது. முருகன் தமிழ் கடவுள்னு சொல்றாங்களே, அப்ப முருகனுக்கு ஏன் சமஸ்கிருதத்தில் மந்திரம் படிக்கிறாங்க? கோயில்ல தமிழ்ல வழிபாடு செய்ய பார்ப்பானுங்க ஏன் எதுக்குறாங்க? பிஜேபி ஏன் மக்கள் பிரச்சினைக்கெல்லாம் போராடாம இந்த மாதிரி விஷயங்கள்ல மட்டும் தூண்டிவிடுது? இப்படியெல்லாம் முட்டாள்தனமா கேள்வியெல்லாம் கேட்கக் கூடாது. என் மேல உங்களுக்கு நம்பிக்கை இருக்குதா இல்லையா? அப்ப, நான் சொல்றதை நம்பித்தான் ஆகணும். இப்ப நான் சொல்றது புரிஞ்சுதா உனக்கு?..."

17.07.2020

இந்து தர்மம் காப்போம்...

வழக்கு எல்லாம் போடமாட்டாராம். நேரடியா ஒரே வெட்டுதானாம். கறுப்பர் கூட்டத்திற்கு இயக்குநர் களஞ்சியம் எச்சரிக்கை விடுக்கிறார். எதனால் என்றால் கந்தர் கவசத்தை அவமதித்துவிட்டார்களாம். அதென்ன "கந்தர் கவசம்"? அதன்பேர் "கந்தர் சஷ்டி கவசம்"தானே. ஏன் சஷ்டி என்பதை சொல்ல மறுக்கிறார்? தமிழ் கடவுளுக்கு சஷ்டியை நுழைத்தது யார், ஏன்? இவர்கள் மீதெல்லாம் அண்ணன் கோபப்பட்டால் இன்னும் என்னாகுமோ?

இந்து தர்மம் காப்போம்...!

மேல் ஜாதிகளுக்கு கூழைக்கும்பிடு போடுவோம்...!!

சஷ்டி என்போம்...
அனுபூதி என்போம்...
சம்ஹாரம் என்போம்...
முருகன் தமிழ்க் கடவுள் என்போம்...
இதைப்பற்றி மூச்சுவிடோம்.
வெற்றிவேல் வீரவேல்...!!

16.07.2020

எனது மதம் இயற்கை

நான் நமது முன்னோர் வழிபாட்டையும் எளிய மக்களின் வழிபாட்டையும் மதிக்கிறேன். இதுகூட அவர்கள் நமக்காக உழைத்துவிட்டுச் சென்றவர்கள் என்ற நன்றிக் கடன் பொருட்டுதான்; அவர்கள் நம்மைக் காப்பார்கள் என்ற நம்பிக்கையில் அல்ல. கடவுளின் பேரால் அரசியல் செய்கிறவர்களை எதிர்க்கிறேன். நம்பிக்கைகளில் எந்தப் புனிதமும் எனக்கில்லை. இயற்கையின் மர்மங்களை இயன்றவரையில் அறிந்துகொள்ள ஆர்வம் கொள்கிறேன். இயற்கையைப் புரிந்துகொள்ள மதங்கள் அறிவுக்கு இடையூறு. இயற்கை யாரையும் நட்போ பகையோ பாராட்டுவதில்லை. அது மனிதர்களைப் பொருட்படுத்தவில்லை. இன்னும் 2000 வருடம் கழித்து பிறக்கப்போகும் மனிதர்களையும் இந்த மந்திரங்கள்தான் காப்பாற்றும் என்று சொல்வதும் நம்புவதும் மிக வேடிக்கையானது. இயற்கையின் புரியாத மர்மங்களால் கடவுள் கருத்து ஆழமாய் உயிர்பெறுகிறது. அதற்கும் உங்களுக்கு நேரடித் தொடர்புகொள்ள ஏதும் தடையில்லை. யார் உதவியும் தேவையுமில்லை. அதன்பேரால் ஏமாற்றும் சுரண்டலும் நடக்கிறபோது எதிர்ப்பதில் யாருக்கு என்ன பிரச்சினை?

15.07.2020

அதெப்படி எங்கள் நம்பிக்கையை விமர்சிக்கலாம்?

கோயிலில் கொலை செய்யலாம். காமலீலை புரியலாம். அனுராதா ரமணனை படுக்கைக்கு அழைக்கலாம். தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கலாம். சிதம்பரம் கோயிலில் பெரிய புராணத்தை தமிழில் பாடினால் உதைக்கலாம். கும்பிட வரும் பெண்களை கன்னத்தில் ஓங்கி அடிக்கலாம். தமிழர் கடவுள்கள் மீது பல ஒழுக்கமற்ற கதைகள் பூசி வேறு கடவுளாக்கலாம். கருவறைக்குள் யாரும் வரக்கூடாது என்று வழக்காடலாம். வசதிக்கேற்ப அர்ச்சனைச் சீட்டு விற்கலாம். சிறப்புக் கட்டணம் என கோயிலில் வணிகம் செய்யலாம். ஜாதிதான் மதத்தின் பலம் எனப் பேசிப்பேசி ஜாதிப்படிநிலை நீர்த்துப் போகாதபடி கட்டிக்காக்கலாம். தமிழில் குடமுழுக்கு கூடாது என்று திமிராகப் பேசலாம். இதைப்பற்றி எல்லாம் எங்களுக்கு அக்கறையில்லை.

தமிழ் முருகனை ஸுப்ரமண்யன் ஆக்கிவிட்டு அவாள்கள்தான் பூஜை செய்ய முடியும் என்ற நிலையைப்பற்றி எப்போதும் பொங்காமல் கிடந்தவர்கள் இப்போது கொதிப்பதெல்லாம் நல்லதுதான். திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடக்கும் அநீதிகளை, பணம் ஏமாற்றுப் பேர்வழிகளை எதிர்த்து யாரேனும் ஒரு போராட்டமாவது நடத்துவார்களா? அங்கு காணாமல்போன முருகனின் நகைகளுக்காக ஒருவராவது குரல் கொடுத்தார்களா? பக்தர்களின் பொங்கல் எல்லாம் போலியானது என்று அவாள்கள் எல்லோருக்கும் தெரியும். இதையெல்லாம் தெரிந்துதான் அவாள்கள் இன்னும் கோயில்களில் தமிழுக்கு எதிராக வேலைபார்த்துக் கொண்டிருக்கின்றனர். கருவறையிலேயே காமலீலை புரிந்துகொண்டிருக்கின்றனர்.
சிதம்பரம் கோயிலில் தமிழில் பதிகம் பாடிய ஆறுமுக நாவலரை தீட்சிதர்கள் அடித்தபோது ஒருவரும் குரல் கொடுக்காமல் போனது எப்படி?
அதெப்படி எங்கள் நம்பிக்கையை விமர்சிக்கலாம் என்று கேட்பவர்கள் இன்றைக்கு உலகில் நாம் நம்பிக்கொண்டிருக்கும் பலவும் இப்படி யாரோ ஒருவர் உண்மையைப் பேசியதால் படிப்படியாக மாறிவந்ததுதான் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

"விமர்சனங்களால் ஏதேனும் ஆட்டம் காணுகிறது என்றால் அங்கு உண்மை வேறு ஏதோ என்பதையாவது புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்"


15.07.2020

விமர்சனத்தால் அலறும் மதங்கள்

மதம் வேறு...
மதவெறி வேறு...

ஆன்மீகம் வேறு...
கடவுள் நம்பிக்கை வேறு...
இயற்கை பற்றிய புரிதல் வேறு...

இது விளங்காத குழப்பவாதிகளும் அரசியல் ஆதாயவாதிகளும்தான் விமர்சனங்களுக்கு அஞ்சுகிறார்கள். உண்மை இருக்கிறவர்கள் விமர்சனங்களை கண்டுகொள்ள மாட்டார்கள். சரியான விளக்கம் கொடுப்பார்கள். மத ஜாதி அமைப்புகள் நடத்திக்கொண்டு கடவுளுக்கு குடை பிடிப்பவர்களை மட்டும் சற்று அமைதியாகக் கவனித்துப் பாருங்கள், ஒரு எளிய உண்மை புரியவரும்.

நீங்கள் இந்துவாக இருக்கலாம். கடவுளை வணங்கலாம். இது உங்கள் உரிமை. ஆனால் கடவுள் என்றால் ஏதோ எளிய மனிதனால் நெருங்க இயலாத விஷயம் போல் அதை பூதாகாரப்படுத்தியும் மந்திரம் பூஜை சடங்கு என்று பயங்காட்டியும் பாமர மக்களை தொடர்ந்து அதிலிருந்து அந்நியப்படுத்தி சிலர் வைத்திருப்பதையும் அறிவுள்ள ஒருவர் எப்படி விமர்சிக்காமல் கடந்துபோக இயலும்? ஒன்றை விமர்சிக்கும்போதுதான் அதைக்கடந்து நீங்கள் இன்னுமுள்ள மெய்யை நெருங்கிச் செல்ல வழி ஏற்படும். பொய்கள் இருந்தால் உடையட்டும். இதில் நமக்கென்ன நட்டம். யாரோ ஒருவர் விமர்சித்துவிட்டால் வீழ்ந்துவிடும் அளவுக்கா மதம் பலவீனமாக இருக்கிறது? விமர்சனங்களை அனுமதித்தால்தான் வளர்ச்சியும் மாற்றமும். இஸ்லாம் இப்படி விமர்சனத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் உலகின் பலமூளையில் வாழும் மக்கள் இன்னும் மாற்றத்தை அனுபவித்திருப்பார்கள்.

14.07.2020

எத்தனை காலத்திற்கு இப்படியே ...?

"நாங்கள் நம்பும் புராணங்கள் ஆபாசமாய் இருந்தால் அதைப்பற்றி எங்களுக்குப் பிரச்சினை இல்லை. யார் இதை இப்படி எதற்காக எழுதினார்கள்? என யோசிக்கமாட்டோம். அது எங்களை எவ்வளவு கேவலப்படுத்தினாலும் கவலையில்லை. ஆனால் அதை ஆபாசம் என்று யாரேனும் வெளிப்படையாக விமர்சித்தால் கொதிப்போம், சீறுவோம். ஆபாசத்துடன் கதை கட்டியவர்களிடமும் தொடர்ந்து அதை பரப்பிக் கொண்டிருப்பவர்களிடமும் கண்டும் காணாமல் பொத்திக்கொண்டு இருப்போம்"

கடவுளை விமர்சிக்கிறார்கள் என்று பொங்கும் மத அமைப்புகள் அதே மதத்தில் கல்வி கற்கவும் வேலையின்றியும் வாழப் போராடும் அடித்தட்டு எளியமக்களின் நலன்களுக்காக பொங்குவதும் போராடுவதுமில்லையே ஏன்?

படிச்சி என்ன பண்ணப்போறோம்? மேல் ஜாதிக்காரனுங்களுக்கு சேவகம் செய்யத்தானே நாம பொறக்குறோம்...
ஹிந்து தர்மம் காப்போம்...!!!
வெற்றிவேல் வீரவேல்...!!!

ச்சே... இந்தத் திக ஆளுங்க இருக்கிறதால எவ்ளோ தொந்தரவு?


14.07.2020


மதத்தை நம்பும் தமிழர்களுக்கு எச்சரிக்கை தேவை

"ஊருக்குள்ள ஸ்பேனர் புடிக்கிறவனெல்லாம் மெக்கானிக்குன்னு சொல்லிக்கிறான்" என்று திருவாளர் கவுண்டமணி சொன்னது இந்தமாதிரி நச்சுக்களையும் சேர்த்துதான். ஒரு சொட்டு விஷம் ஒரு குடம் பாலையும் கெடுக்கும். எப்போதும் விஷம் வீரியம் இழப்பதில்லை. மதத்தை நம்பும் தமிழர்கள் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும் இந்த பீஹாரி பார்ப்பானிடத்தில்.


14.07.2020

தமிழர்களின் மொழியறிவு

 தமிழர்களின் மொழியறிவு எத்தகையது? ஒரு உதாரணம் பாரீர்...

⚜
*"வே' என்ற ஒற்றைத் தமிழெழுத்து அல்லது தமிழ்ச் சொல்லிற்கு 'மறை' (#மறைத்து_வைத்தல்) என்பது பொருளாகும்.*
⚜
*தாவரங்களின் வேரானது, மண்ணுக்குள் ஓடி மறைந்து கிடப்பதாலேயே அது 'வே'ர் எனப்பட்டது.*
⚜
*மறைந்திருந்து தாக்குவதாலேயே அவன் 'வே'டன் எனப்பட்டான். வேட்டையும் அப்படித்தான்.*
⚜
*சுற்றிலுமிட்டு மறைத்துப் பாதுகாப்பதாலேயே 'வே'லி எனப்பட்டது. வேய்தலும் அப்படித்தான்.*
⚜
*சுடுநீரில் மூலிகைகளையிட்டு, அடர்த்துணி கொண்டு நம்மை மூடிமறைத்து, அதனை முகர்ந்து நோய்போக்கும் நிகழ்வு 'வே'து பிடித்தல் எனப்பட்டது.*
⚜
*'வே'ய்ங்குழல் எனச் சங்க இலக்கியங்கள் முதல் போற்றும் பெண்ணில் அடர்க்கூந்தல், அப்படியே அவளது முழுவுடலையும் கவிழ்ந்து மறைக்கக் கூடியதாகையால் அவ்வாறு கூறப்பட்டது.*
⚜
*நம்முடலின் பாகங்களையும், மானத்தையும் மறைத்துக் காப்பாற்றுவதாலேயே அவ்வுடை 'வே'ட்டி எனப்பட்டது.*
⚜
*வேதத்தைக் கூட " மறை" என்றுதான் தனித் தமிழில் கூறுகிறோம்.*
⚜
*கண்ணுக்கு தெரியாத அளவுக்கு மறைவாக விரைவாக செல்வதால் வே'கம் எனப் படுகிறது.*
⚜
*உண்மைத்தன்மை தெரியாமல் இருப்பதாலேயே அது வே'டம்.*
⚜
*கசப்பு வெளியே தெரியாமல் உள்ளே மறைவாக இருப்பின் அது வே'ம்பு.*
⚜
*ஈராயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருக்கும் மொழி என்றால் சும்மாவா? தமிழைக் கொண்டாடுவோம்.*

09.07.2020

மழை இறங்கும் காட்சி...

 


பக்கத்து ஊரில் மழை இறங்கும் காட்சி...



05.07.2020

நம்பிக்கையை இழக்கலாமா?

மருத்துவம் மக்களைக் காக்கிறது. மந்திரங்கள் யாரைக் காக்கிறது? சர்வ வல்லமை படைத்த வேதங்களும் மந்திரங்களும் அறிந்த அறிவாளிகள் இப்படி கொரோனோவிற்கும் உயிருக்கும் பயந்து 'சௌகர்யமாய்' தங்களை ஜீவிக்கவைக்கும் மந்திரங்களின் வேதங்களின் மீதான நம்பிக்கையை இழக்கலாமா?


30.06.2020

நான் போலிசில்ல பொறுக்கி... - இயக்குநர் ஹரி


விசாரணைகளின்போது இதுவரையில் ஏராளமான அப்பாவிகள் நாடெங்கும் போலிசாரால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். இதெல்லாம் இயக்குநர் ஹரிக்கு இதுவரையில் தெரியாமல் இருந்ததா? அல்லது சாத்தான் குளத்தில்தான் முதன் முறையாக காவல்துறை கொடூரம் நிகழ்த்தியதா? அல்லது இதுவரையில் இல்லாமல் காவல்துறையின் உண்மை முகம் இப்போதுதான் ஹரி அவர்களுக்கு தெரியவந்ததா? அல்லது பெருமைப்படுத்தி படம் எடுத்ததாக அவர் சொன்னதெல்லாம் பொய்யா?

28.06.2020

வி.பி.சிங் - இந்திய வரலாற்றில் என்றைக்கும் ஒளிரும் நட்சத்திரம்

ஆண்ட ஜாதிகள் என்று தங்களை தாங்களே பீற்றிக்கொள்ளும் இந்தியாவிலுள்ள எல்லா ஜாதி இந்துக்களுக்கும் இடஒதுக்கீடு கிடைத்த பின்னர்தான் தங்களுக்கான தகுதியை உணரும் கதவு திறந்தது. பிராமணர்களே உயர்ந்தவர்கள் என்ற அடிமை எண்ணம் இருக்கும் இந்துக்களே இன்னும் இடஒதுக்கீடு பற்றிய புரிதல் இல்லாமல் இருக்கின்றனர். அதே பிராமணர்கள்தான் இன்றும் இந்த ஜாதி இந்துக்கள் வளராதபடி பல்வேறுவகையில் கவனமாகக் கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றனர். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டுமென முதலில் குரல் கொடுத்தது அம்பேத்கர்தான். ஆண்ட ஜாதி இந்துக்களுக்கே இந்த நிலைமைதான் இந்தியாவில். ஆனால் இவர்களோ வரலாறு தெரியாமல்; பிராமண சூழ்ச்சி உணராமல் ஜாதிப்படிநிலையில் தங்களுக்குக் கீழுள்ள வலுவற்ற மக்களிடமே கம்பு சுற்றிக்கொண்டிருக்கின்றனர்.

வரலாற்று சிறப்புமிக்க மண்டல் குழுவின் அறிக்கையை துணிச்சலுடன் செயல்படுத்த திராவிட இயக்கமே பக்கபலமாக இருந்தது பலருக்கும் தெரியவில்லை.
வி.பி.சிங்... இந்திய வரலாற்றில் என்றைக்கும் நட்சத்திரம்.


25.06.2020

இப்படிக்கு கொரோனா வைரஸ்

 "குழந்தைகளுக்கு பள்ளிக்கூடமும் தேர்வும் அவசியமா?

- இப்படிக்கு
கொரோனா வைரஸ்

22.06.2020

அப்பாவின் அன்பு

"அம்மாவின் அன்பை அவர் இருக்கும்போது உணரலாம். அப்பாவின் அன்பை அவர் இல்லாதபோது முழுமையாக உணரலாம்"

22.06.2020

அரசியல் அதிகாரம்...?


எங்களுக்கான இட ஒதுக்கீட்டு உரிமைகளை திட்டமிட்டு மறுக்கும் அரசு குறித்து கேள்வி எழுப்ப மாட்டோம். போராட சிந்திக்க மாட்டோம். தலைமுறை தலைமுறையாய் ஆடு மாடு மட்டுமே மேய்த்து பெருமை பேசியே சாவோம். ஆடு மாடுகள் திருடு போகும்போதும் விபத்தில் இறக்கும்போதும் உதவ ஆளில்லாமல் தவிப்போம், அழுவோம். எதற்கும் காவல்துறையை, நீதிமன்றத்தை அணுகத் தயங்குவோம். செயல்திறன் இல்லாதவர்களையெல்லாம் தலைவன் என்று நம்பித் திரிவோம். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அநீதிகளுக்கு எதிராக எதிர்க்குரல் எழுப்ப அஞ்சி ஊமையாகவே
இருந்து சமூக அரசியல் அதிகாரத்தில் பங்கெடுக்க முனையாமல் ஜாதிப் பெருமையை மட்டும் பேசிக்கொண்டிருப்போம். ஜாதி மத மூடத்தனத்திற்கு பல்லக்கு தூக்குவோம். எவனாவது அறிவு, சிந்தனை என்றால் கூட்டமாய் போய் ஆபாசமாய் சண்டையிடுவோம். கிருஷ்ணா கிருஷ்ணா என்று பேசியே எல்லாவற்றிலும் ஏமாந்துபோவோம். திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து எல்லோர் வீட்டுக்கும் அரிசி வருவதால் இதைப் பேசிப்பேசியே பிறவிப் பயன் அடைவோம். 2 MLA -வுக்கும் தகுதியில்லாமல் ஜாதி மதம் புராணம் என்பது பற்றியே காலத்திற்கும் காற்றில் கோட்டை கட்டிக்கொண்டிருப்போம். எங்கள் எதிர்காலத் தலைமுறைகளும் சிந்தனை அடிமைகளாகவே இருக்கத் தேவையான எல்லா வேலைகளையும் முனைப்பாய் செய்வோம்.

13.06.2020